இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 17 மே, 2021

கார்போகரிசி

 

               மூலிகையின் பெயர்..............................கார்போகரிசி
               மாற்றுப் பெயர்:............................... .....கார்புவ ஆரிசி
                .....................................................கப்புவா அரிசி, பாகுசி
               ...................................................................சம்பங்கி விதை

               தாவரவியல் பெயர் ......... PSORALEA CORRYLIFOLIA.
               தாவரக்குடும்பம் -............................... LEGUMINACEAE
               ஆங்கிலப் பெயர்.....................................BABCHI SEEDS

 

==================================================

 

 

01.   கார்போகரிசி ஒரு செடி வகையைச் சேர்ந்தது. இது சுமார்  3 அடி உயரம் வரை வளரும்.

 

02.   இலைகள் அகலமாக இருக்கும், கொத்தாக இருக்கும். ஒரு கிளையில் 8-12 பூக்கள் பூக்கும். அவை காயாகி விதைகள் உண்டாகும்.

 

03.   காய்கள் சுமார் 7-8 மாதங்களில் முதிர்ந்து விடும். இதன்விதையிலிருந்து  எண்ணெய் எடுப்பார்கள் ( ரோகன் பாப்சி).

 

04.   இதன் இலை, பழம், விதை, வேர் யாவும் மருத்துவப் பயன் உடையவை.

 

05.   .பயன் தரும் பாகங்கள் -: இலை, பழம், விதை, மற்றும் வேர் முதலியன.

 

06.   இதில் உள்ள முக்கிய வேதிப் பொருட்கள் -: சொரோலின் மற்றும் ஐசோசொரோலின்.(PSORALEN)

 

07.   மருத்துவப் பயன்கள்- ஆதிகாலத்தில் சைனாவிலும், இந்தியாவிலும் இதன் எண்ணெயை உடல் வெளி பாகத்தில் தேய்த்து தோல் வியாதிகளைப் போககினர் மேலும் உடலுக்குப் புத்துணர்ச்சியூட்டவும்  இதை உபயோகித்தார்கள்.

 

08.   இதன் வேர் பல் வியாதிகளுக்குப் பயன் படும்.

 

09.   கார்போகரிசி இலை அமீபாவால் வரும் வயிற்றுப் போக்கிற்கும், புண்களை ஆற்றவும்  வல்லது.

 

10.   கார்போகரிசி பழம் வாந்தி, மூலம், இரத்த சோகை, சுவாச சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும். முடிவளரவும் பயன் படுத்தப் பட்டது. 

 

11.   கார்போகரிசி வயிற்று வலி, முதுகு வலி, கிட்னிகள் சம்பந்தப் பட்ட நோய்களையும் குணப் படுத்தும். இது தாது விருத்தியுண்டாக்கி உடல் வன்மை பெறப் பயன்  படும்.

 

12.   கார்போகரிசி  விதையிலிருந்து எண்ணெய் எடுத்து அதை இருதய சம்பந்தமான நோய்களுக்கும், யானைக்கால்  வியாதியைக் குணப்படுத்தவும், இரத்த ஓட்ட  சம்பந்தமான வியாதியை சீர் செய்யவுதோல் வியாதிகளைக் குணப்படுத்தவும், மற்றும் வெண்  குஷ்டம், குஷ்டம், "AIDS" க்கும் நல்ல மருந்தாகப்  பயன்படுகிறது. 

 

13.   கார்போகரிசியால் கடுவன், விரணம், பயங்கரமான சர்ப்பகீட தாவர விஷங்கள், வாத சிலேத்தும தொந்தம், தினவு, யானைச் சொறி, கிரந்தி ஆகிய இவைகள் நீங்கும். பித்தம் அதிகரிக்கும் என்பர்.

 

14.   தன் சூரணத்தை 5 - 10  குன்றிமணி  எடை சர்க்கரையுடன் கூட்டிக் கொடுக்கலாம். இது தீபத்தை  உண்டாக்கும். மலத்தைப் போக்கும். தோல் சம்பந்தமான பல வியாதிகளைக் குணப் படுத்தும். விஷேசமாக இந்த சரக்கை வாசனைத் திரவியங்ளிலும் உபயோகப் படுத்துவதுண்டு.

 

15.   சந்தனாதிச் சூரணம்-- கார்போக அரிசி, நீரடிமுத்து, கஸ்தூரி மஞ்சள், கோரைக் கிழங்கு, சந்தனத்தூள், அகில் கட்டை, தேவதாரு, கற்பாசி, வெட்டிவேர், குருவி வேர், ஆக பத்து சரக்குகளையும் வகைக்குப் பலம் ஒன்றாக இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு  குளிக்கும் போது இச்சூரணத்தை நீர் விட்டுக் குழைத்துத் தேகமெங்கும் பூசித் தேய்த்து 5 - 10  நிமிடம் வரை ஊற விட்டுப் பின் நன்றாய்த் தேய்த்துக் குளிக்கவும். இப்படி ஒரு மாதம் செய்ய சொறி, சிரங்கு, நமைச்சல்,  படை, தவளைச் சொறி, கருமேகம், இரத்தக் கொதிப்பினால் உண்டாகும் பல நிற வடுக்கள் யாவும் போம்.

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )03]

{17-05-2021}

 

==================================================

கார்போகரிசி


கார்போகரிசி


கார்போகரிசி


கார்போகரிசி


கார்போகரிசி

                              


காட்டாமணக்கு

 

                மூலிகைப் பெயர்....................................... காட்டாமணக்கு
                மாற்றுப் பெயர்கள்.......... லியாமணக்கு, ஏரிக்கரைக்

           ..............................................காட்டாமணக்கு, காட்டாமணி

               .......................................................................................ஆதாளை
               தாவரவியல் பெயர்.................................JATROPHA CURCAS
               சுவை..............................................................................துவர்ப்பு
               தன்மை......................................................................... வெப்பம்
    
====================================================


01.   மாற்றடுக்கில் அமைந்த கை வடிவ இலைகளையும், கருஞ் சிவப்பு நிறத் துளிர்களையும், செந்நிற மலர்களையும் உடைய குறுஞ் செடி. காய் முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும். விதை ஆமணக்கு விதை போன்று சிறிய வடிவில் இருக்கும். இலைக் காம்பை ஒடித்தால் சிறு வெள்ளை நிறப் பால் வடியும்.

 

02.   இலை, பால், பட்டை, எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை.

 

03.   ஆதாளை, எலியாமணக்கு என்ற பெயரிலும் வழங்கப் பெறும். இலை தாய்ப்பாலையும் உமிழ்நீரையும் பெருக்கும். பால் இரத்தக் கசிவை நிறுத்தவும், சதை, நரம்பு வீக்கத்தை குறைக்கவும் பயன்படும்.

 

04.   காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டப் பால் சுரக்கும். ஒரு படி நீரில் ஒரு பிடி இலையைப் போட்டு வேகவைத்து, இறக்கி இளஞ்சூட்டில் துணியில் தோய்த்து மார்பில் ஒற்றடம் கொடுத்து, வெந்த இலைகளை வைத்துக் கட்டப் பால் சுரப்பு உண்டாகும்

 

05.   காட்டாமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்ட, கட்டிகள் கரையும்; வலி அடங்கும்.

 

06.   காட்டாமணக்கு இளங் குச்சியால் பல் துலக்கப் பல் வலி, பல் ஆட்டம், இரத்தம் சொரிதல் தீரும்.

 

07.   காட்டாமணக்குப் பாலை வாயில் விட்டுக் கொப்பளிக்க வாய்ப் புண்கள் ஆறும். பாலைத் துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்களில் வைக்க இரத்தப் பெருக்கு நிற்கும். 

 

08.   காட்டாமணக்கு வேர்ப் பட்டையை நெகிழ அரைத்துச் சுண்டைக் காயளவு பாலில் கலந்து கொடுத்து வரப் பாண்டு, சோகை, காமாலை, வீக்கம், வயிற்றுக் கட்டி, பெரு வயிறு குட்டம் ஆகியவை தீரும்.

 

09.   காட்டாமணக்குக்  கொழுந்தை  சிறிதளவு  எடுத்து  ஒரு வெற்றிலையில் வைத்து நன்கு  கசக்கித்  தேள்  கொட்டியவரிடம் வாயிலிட்டுமென்று விழுங்கச் செய்தால், உடனடியாக நஞ்சு இறங்கும்.

 

10.   காட்டாமணக்கு இலைகளை பறித்து நீர் விட்டு மைய அரைத்து ஆசனவாயில் கட்டி வந்தால் மூலம் சரியாகும்.(349)

 ===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )03]

{17-05-2021}

 

==================================================

காட்டாமணக்குச் செடி


காட்டாமணக்குத் தோட்டம்


காட்டாமணக்குக் காய்

காட்டாமணக்கு விதை