இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

தழுதாழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தழுதாழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 மே, 2021

தழுதாழை

 

         மூலிகைப் பெயர்..............................................தழுதாழை

         மாற்றுப் பெயர்கள்......................தக்காரி, வாதமடக்கி,

         ................................................................................நந்தக்காரி

         தாவரவியல் பெயர்.........CLERODENDRUM PHLOMIDIS

         சுவை...........................................................................கைப்பு

         தன்மை.....................................................................வெப்பம்

 

===================================================

 

(1)   தழுதாழை வெளிர்ப் பச்சையான எதிரடுக்கில் அமைந்த இலைகளை உடைய குறுஞ்செடி.  புதர்க் காடுகளில் தமிழகமெங்கும் தானே வளர்கிறது. இலையே மருத்துவப் பயன் உடையது,

 

(2)   தழுதாழை மூலிகையால் பக்கவாதம் முதலிய 80 வாத நோய்கள், மூக்கடைப்பு நோய்கள், புரை, கழலை, சிலேத்தும சுரம், குடைச்சல் ஆகியவை நீங்கும்.

 

(3)   தழுதாழை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒற்றடம் கொடுத்து வர சுளுக்கு, கீல் பிடிப்பு, மூட்டு வலிகள் தீரும்.

 

(4)   தழுதாழை இலைச் சாற்றை மூக்கில் உறிஞ்சி வர மண்டைக் குடைச்சல், மூக்கில் நீர் வடிதல், தும்மல், சளி சிறிது சிறிதாகக் குறையும்.

 

(5)   தழுதாழை இலையை ஆலிவ் விதை எண்ணெயில் வதக்கிக் கட்ட யானைக்கால் வீக்கம், விரை வாதம், வாத வீக்கம், நெறிக் கட்டிகள் தீரும்

 

(6)   தழுதாழை இலைகளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்துக் குளித்து வந்தால்  வாத வலிகள் அனைத்தும் தீரும்.

 

(7)   தழுதாழைச் செடியின் வேரை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, தசைப் பிடிப்புகளுக்குத் தடவி வரலாம். அல்லது தழுதாழை இலையில் விளக்கெண்ணெய் தடவி வெதுப்பி வைத்துக் கட்டலாம்.

 

(8)   தழுதாழை  இலைகளை ஆலிவ் விதை எண்ணெய் விட்டு வதக்கிக் கட்டி வந்தால் யானைக் கால் வீக்கம், விரை வாதம், வாத வீக்கம், நெறிக் கட்டிகள் ஆகியவை குணமாகும். (1101)

 

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி)08]]

{22-05-2021}

===================================================


தழுதாழை


தழுதாழை