இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

அரசு (அரசமரம்) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு (அரசமரம்) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

அரசு (அரச மரம்)

                          மூலிகைப்பெயர்.........................................: அரசு

                     மாற்றுப் பெயர்கள்................................................

                          தாவரவியல் பெயர்........................Ficus religiosa

                          ஆங்கிலப் பெயர்................................PIPAL TREE

 

         ====================================================


 

01.    அரச இலைகளை நீரில் போட்டு ஊற வைத்து, அந்த நீரை எடுத்து அருந்தி வந்தால் மிகுதாகம் கட்டுப்படும்.(299)

 

02.    அரச மரத்தின் பட்டை, வேர், பழம், இலை ஆகியவற்றை எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து காய்ச்சிய பாலுடன் ஒரு தேக்கரண்டி அளவுக்கு இத் தூளைச்  சேர்த்து அருந்தி வந்தால் ஆண்மை பலம் பெருகும்.(499)

 

03.    அரசமரக் கொழுந்து, ஆலமரக் கொழுந்து, அத்தி மரக் கொழுந்து ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி குணமாகும்.(368)

 

04.    அரச மரக் கொழுந்துகளைப் பறித்து வந்து மோர் விட்டு அரைத்து, அரைத்த விழுதை ஒரு தம்ளர் மோருடன் கலந்து அருந்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.(684)

 

05.    அரச மரப் பட்டைகளை எடுத்து வந்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப் புண்கள் ஆறும்.(252)

 

06.    அரசம் பழத்தைச் சேகரித்து உலர்த்திப் பொடி செய்து தினமும் ஒரு தேக்கரண்டி பொடியை எடுத்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் தாது பலம் பெருகும்.(501)

 

07.    அரசம் பழத்தை உலர்த்திப் பொடி செய்து 5 கிராம் பொடியை வெந்நீரில் கலந்து தினசரி காலை மாலை 20 நாட்கள் அருந்தி வந்தால் சுவாசக் கோளாறுகள் நீங்கும்.(610)

 

08.    அரச மரத்தின் பழங்களைச் சேகரித்து அதில் உள்ள விதைகளை உலர்த்திப் பொடி செய்து தினசரி அரை தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து அருந்தி வந்தால் விந்து எண்ணிக்கை அதிகரிக்கும்.(492)

 

09.    அரசமர விதைத் தூளை அரைத் தேக்கரண்டி எடுத்து  பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண் மலடு நீங்கும்.(522)

 

10.    அரச மரத்திலிருந்து வடியும் பாலினை எடுத்துப் பித்த வெடிப்பிற்குத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.(421)

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !  

===============================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

===============================================



அரசமரம்

அரசங்காய்

அரசம்பழமும் விதையும்