இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

கல்யாண முருங்கை

 

             மூலிகையின் பெயர்:....................கல்யாண முருங்கை
             மாற்றுப்பெயர்......................முள் முருங்கை, கிஞ்சுகம்
             தாவரவியல் பெயர்............................ERYTHRINA INDICA
             தாவரக் குடும்பம்.................................................FABACEAE
             ஆங்கிலப் பெயர்...............................INDIAN CORAL TREE
        

 ===================================================


01.   மிகுக் கொடிகளைப் படரவிட இதை வளர்ப்பார்கள். காப்பிப் பயிர்களுக்கு இடையிலும் நிழலுக்காக வளர்ப்பார்கள்

 

.   

02. இது சுமார் 85 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் அகன்றும் பெரிதாகவும் இருக்கும். இதன் மலர்கள் அதிக சிவப்பாக இருக்கும்.

 


03. . உருட்டு விதைகளையும் முட்களையும் கொண்ட மென்மையான கட்டைகளையும் உடைய மரம். விதைகள் கருப்பாக இருக்கும்.

 

04. முருக்க மரம் என்றும் வழங்கப்பெறும். கட்டைகளை வெட்டி ஈரத்தில் நட்டால் உயிர் பிடித்து வளரும். விதை மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படும்.

 

05.   கல்யாணமுருங்கை மரத்தில் பயன் தரும் பாகங்கள் மரத்தின் இலை, பூ, விதை, பட்டை ஆகியவை ஆகும்.

 

06.   இது துவர்ப்பும் கசப்பும் கலந்த சுவையுடையது. இலை சிறுநீர் பெருக்கும்; மலமிளக்கும்; தாய்பால் பெருக்கும்;  வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம்,
உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு, ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்டல் செய்கையும் உடையது.

 

07.   கல்யாண முருங்கைப்பூ கருப்பைக் குறை நீக்கியாகவும், பட்டை கோழையகற்றி யாகவும், விதை மலமிளக்கி குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும்.

 

08.   கல்யாண முருங்கையின் இலைச்சாறு 50 மில்லி 10 நாள் சாப்பிட மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்களுக்கு லி தீரும். (617)

 

09.   கல்யாண முருங்கை இலைச்சாறு 15 மி.லி. ஆமணக்கு நெய் 15 மி.லி. கலந்து இரு வேளை மூன்று நாள் குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

 

10.   கல்யாண முருங்கை இலைச் சாறு 50 மி.லி. தேன் 20 மி.லி. கலந்து சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும்.

 

11.   கல்யாண முருங்கை  இலைச்சாறு நாளும் 50 மி.லி. 40 நாள் குடித்து வர பெண் மலடு நீங்கி கரு தரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும் இளைக்கும்.

 

12.   கல்யாண முருங்கை இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் (தேங்காயெண்ணெய்) விட்டு வதக்கி 5 முறை சாப்பிட பூப்பு எய்தாத பெண் குழந்தைகள் பருவமடைவர். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

 

13.   கல்யாண முருங்கை இலைச் சாறு 30 மி.லி.யுடன் பூண்டுச்சாறு 30 மி.லி.சேர்த்து அரிசி கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட சுவாசகாசம் குணமாகும். ( சுவாச காசம் என்பது ஆஸ்துமா,) ஆஸ்துமா குணமாகும். புலால், புகை, போகம் தவிர்க்கவும்.

 

14.   கல்யாண முருங்கை  இலைச் சாறு 60 மி.லி எடுத்து  15 கிராம் உப்பு சேர்த்து காலை நேரத்தில் ருந்தினால்  பேதியாகும். பேதியில் பூச்சி வெளியேறும்.

 

15.   கல்யாண முருங்கை இலைச் சாறு, தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி சிரங்கு தீரும்.

 

16.   கல்யாண முருங்கை இலைச்சாறு 10 மி.லி.யுடன் வெந்நீர் 10 மி.லி. கலந்து குழந்தைக்கும் கொடுக்க கீரிப்பூச்சி வெளியேறும். கபம், இருமல் தீரும்.

 

17.   கல்யாண முருங்கை மரப்பட்டையை 10 கிராம் எடுத்து  100 மி.லி. பாலில் ஊறவைத்து ஒரு மணிக்கு 20 மி.லி. வீதம் அந்தப் பாலைக் கொடுத்து வந்தால் நிற்காத வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

 

18.   கல்யாண முருங்கை இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்து நாளும் கட்டிவர அரையாப்புக் கட்டி, வீக்கம் கரையும்.

 

19.   கல்யாண முருங்கை இலைச் சாறு ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து குடிக்க நீர்தாரை அழற்சி, நீர் எரிச்சல் தீரும்.

 

20.   கல்யாண முருங்கை இலைச்சாற்றில் 5 அரிசி எடை விதைப்பருப்பு, சூரணம் சேர்த்து சாப்பிட குடற் பூச்சிகள் வெளியேறும்.

 

21.   கல்யாண முருங்கை இலை அடை சுட்டுச் சாப்பிட்டால் நெஞ்சுச் சளி வெளியேறும்.

 

22.   கல்யாண முருங்கை இலைச் சாறினை எடுத்து சிறிது உப்பு சேர்த்துக் கலக்கி கரும்படை மீது தடவி வந்தால் சில நாட்களில் கரும்படை மறையும்.  (1017)

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

===================================================


கல்யாண முருங்கைப் பூ

கல்யாண முருங்கை இலை

கல்யாண முருங்கை மரம்

கல்யாண முருங்கை

 

 

கருவேல மரம்

 

                     மூலிகைப் பெயர்.....................................கருவேல்

                     மாற்றுப் பெயர்..........................................................

                     தாவரவியல் பெயர்................. ACACIA NILOTICA

                     ஆங்கிலப் பெயர்................................BABUL TREE

      ===================================================

 

 

01.  கருப்பு நிறமும், எதிரடுக்கில் அமைந்த சிறிய இலைகளும், உருண்டை வடிவத்தில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ள மணமுள்ள பூக்களும் உள்ள மரம் கருவேல மரம்.

 

02.  இருபது அடி உயரம் வரை வளரக் கூடிய உறுதியான உள்ளமைப்பு உடைய கருவேலமரம் கிளைகளில் முட்கள் உள்ள அமைப்பு உடையது.

 

03.  கருவேல மரத்தின் காய்கள் ஆறு அங்குலம் நீளம் வரை வளரக் கூடியவை. பட்டையான அமைப்பு உரைய கருவேலங் காயின் இரு புற விளிம்புகளும் அலை அலையாய் நெளிந்த அழகிய தோற்றம் உடையவை.

 

04.  கருவேல மரத்தின் பிசின் தாள்களை ஒட்டுவதற்குப் பயன் படுத்தப்படுகிறது.

 

05.  கருவேல மர இலைகளைப் பறித்து வந்து அரைத்து இரவு தோறும் ஆசன வாயில் வைத்துக் கட்டி வந்தால் மூலம் குணமாகும்.(353) (387)

 

06.  கருவேல மர இலைகளை அல்லது கொழுந்துகளை மை போல் அரைத்து புண்கள் மீது வைத்துக் கட்டி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.(1033) (1004) (1916)

 

07.  கருவேலம் பிசினைச் சுத்தம் செய்து காய வைத்து இலேசாக வறுத்து தூள் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு தாது புஷ்டியாகும்.(496)

 

08.  கருவேலங் கொழுந்தைக் கசக்கிச் சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.(172)

 

09.  கருவேலந் துளிரைப் பறித்து அரைத்து ஐந்து கிராம் மோரில் கலந்து உள்ளுக்குக் கொடுத்தால் உண்ட நஞ்சு முறியும்.(905)

 

10.  கருவேலம் பட்டையைப் பொடி செய்து பற்பொடியாக்கிப் பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் நெருங்காது.(248)

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

================================================

நாட்டுக் கருவேல மரம்


கருவேல மரம்

கருவேலம் பூ

கருவேலம் பிசின்

கருவேலங்காய்



 

+