இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளறுகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளறுகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 ஜூன், 2021

வெள்ளறுகு

        மூலிகைப் பெயர்............................................வெள்ளறுகு

        மாற்றுப் பெயர்......................................................................

        தாவரவியல் பெயர்...............................................................

        ஆங்கிலப் பெயர்.......................ENICOSTEMA  AXILLARE


===================================================

01.   வெள்ளருகு பறித்து வந்து மைய அரைத்து வைத்துக் கட்டினால் கால் ஆணி குணமாகும்.  (1043) (1879)

 

02.   வெள்ளருகு பறித்து வந்து அரைத்து சாறு எடுத்து 25 மி.லி குடித்தால் பாம்பு கடி நஞ்சு இறங்கும்.  (1588)

 

03.   வெள்ளருகு சமூலம் எடுத்து சுத்தம் செய்து அரைத்து வெந்நீரில் கலந்து உடல் முழுதும் பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்தால் சிரங்கு, ஊறல் குணமாகும். (1589)

 

04.   வெள்ளறுகு சமூலத்தை அரைத்து மாதவிடாய் ஆகும் மூன்று நாட்களும் 2 கிராம் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு வந்தால் கருப்பைப் புழு நீங்கும்.  (1602) 

 

05.   வெள்ளறுகு சமூலம், மிளகு, சுக்கு, சீரகம் ஆகியவற்றை எடுத்து நீர் சேர்த்து கசாயம் வைத்து 50 மி.லி. அளவுக்கு காலை மாலை குடித்து வந்தால் நரம்புக் கோளாறுகள் நீங்கும்.  (1649)


==========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 ==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021} 

==================================================


வெள்ளறுகு

வெள்ளறுகு

வெள்ளறுகு

வெள்ளறுகு