இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

ஆடு தின்னாப் பாளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடு தின்னாப் பாளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஆடு தின்னாப் பாளை

        

                 மூலிகைப்பெயர்................ ஆடு தின்னாப்பாளை

                 மாற்றுப் பெயர்கள்..........................பங்கம் பாளை

                  ..................................................ஆடு தொடாப்பாளை

                 தாவரவியல் பெயர்...................Aristolochia indica

                ஆங்கிலப் பெயர்.....................INDIAN BIRTH WORT

                 ..................................................................WORM KILLER

   ====================================================

 

01.      காக்கை வலிப்புக்கு ஆடுதின்னாப் பாளை மிகச் சிறந்த மருந்து.

 

02.      காலையில் வெறும் வயிற்றில் இந்த மருந்தைச் சாப்பிட வேண்டும்.

 

03.      இரண்டு கைப்பிடி இலைகளை எடுத்து இரண்டு பூண்டுப் பற்களும் சிறிது உப்பும் சேர்த்து கசக்கிச் சாறு பிழிய வேண்டும். அரைத் தம்ளர் அளவுக்குச் சாறு தயாரித்து வலிப்பு நோய் உள்ளவர்களுக்குக் குடிக்கக் கொடுக்க வேண்டும்.  இம்மாதிரி காலை மாலை 3 நாள்கள் கொடுக்க வேண்டும். மாலையில் கொடுக்கும் மருந்து ஐந்து மணிக்குள் கொடுத்து விட வேண்டும்.

 

04.      முதல் நாள் காலை மருந்து சாப்பிட்டவுடன் ஒரு மணி நேரம் கழித்து உப்பில்லாமல் புழுங்கல் அரிசிக் கஞ்சி கொடுக்க வேண்டும். மதியம் உப்புச் சேர்க்காமல் கேழ்வரகு ரொட்டி தட்டி சுட்டுக் கொடுக்க வேண்டும்.தேவையானால் சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளலாம். இரவிலும்  இதே உணவுதான்.

 

05.      மருந்து சாப்பிடும் மூன்று நாள்களும் இதேமாதிரி உணவுக் கட்டுப்பாடு தேவை. வேறு எந்தப் பொருளும் சாப்பிடக் கூடாது.

 

06.      நான்காம் நாளிலிருந்து பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசிச் சோறு சாப்பிடலாம். குழம்பிற்கு துவரம் பருப்பு மட்டுமே பயன்படுத்தலாம்.

 

07.      குழம்பில் அரைப் புளி, அரைக் காரம் சேர்க்கலாம். மிளகாயைக் குறைத்து மிளகு சேர்க்கலாம். குழம்பைத் தாளிக்க எள் எண்ணெய் / பசு நெய் விட்டு சிறிது கறிவேப்பிலை, மிளகு போட்டு தாளிக்கலாம்.

 

08.      குழம்பு அல்லாமல் மிளகு ரசம் சாப்பிடலாம். ஆனால் கால் பாகம் புளி,         கால் பாகம் மிளகாய், போதுமான மிளகு சேர்க்கலாம்.

 

09.      முதல் நாள்மருந்து சாப்பிட்டதிலிருந்து 15 ஆம்நாள் அதே மருந்தை மூன்று நாள் சாப்பிடவேண்டும்.அதே போல் பத்திய உணவை 15 நாள் சாப்பிட்டு வர வேண்டும்.

 

10.      ஒரு மாதம் கழித்து பத்திய உணவு தேவையில்லை.  ஆனால் வாழ்க்கை முழுதும் பலாப் பழம் சாப்பிடக் கூடாது. வரகு அரிசிச் சோறு ஆகாது. சுனை நீர் அருந்தலாகாது. பன்றிக் கறி, முயல் கறி  ஆகவே அகாது.

 

11.      மூன்று மாதங்கள் வரை எண்ணெயினால் செய்த பலகாரங்கள் சாப்பிடக் கூடாது. கருவாடு, மீன் கோழி, ஆட்டுக் கறி போன்ற மாமிச உணவுகளை உண்ணக்கூடாது. இனிப்புப் பண்டங்கள் ஆகாது.

 

12.      மருந்து சாப்பிட்டு ஒரு மாதம் வரை வலிப்பு நோயின் தாக்கம் இருக்கும். அதன் பின் மறைந்து விடும். ஆயுள் முழுக்க வலிப்பு வரவே வராது. (ஆதாரம்: ”நாட்டு மருத்துவமணி நாகம்மாநூல்.

 

13.      ஆடு தின்னாப் பாளை இலையை அல்லது வேரை வாயில் போட்டு மெல்ல வேண்டும். சுவை கசந்தால் உடலில் விஷம் இலை என்று அறியலாம் பாம்பு கடித்துவிட்டால் விஷம் பற்றி அறிய இது உதவும்.(217)

 

14.      ஆடு தின்னாப் பாளைச் சாறு எடுத்து வேப்ப எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து காய்ச்சி ஆற வைத்து  அந்தத் தைலத்தை கரும்படைக்குத் தடவி வந்தால் குணமாகும்.(448)

 

15.      ஆடு தின்னாப் பாளை இலைகளை எடுத்துக் கசாயம் செய்து 30 மி.லி சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.(695)

 

16.      ஆடு தின்னாப் பாளை இலைகளைப் பொடி செய்து வெந்நீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுத்தால் விஷ முறிவு ஏற்படும்.(879)

 

17.      ஆடு தின்னாப் பாளை வேரினை எடுத்துக் கசாயம் செய்து குடித்தால் பாம்பின் விஷம் முறியும்.(893)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

 

==================================================


ஆடுதின்னாப் பாளை


ஆடுதின்னாப் பாளை