இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

சிவனார்வேம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவனார்வேம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 மே, 2021

சிவனார் வேம்பு

 

       மூலிகைப் பெயர்....................................சிவனார்வேம்பு

       மாற்றுப் பெயர்.......................................................காந்தாரி

       தாவரவியல் பெயர்.................................................................

       ஆங்கிலப் பெயர்................INDIGOFERA ASPALATHOIDES

 ==================================================

 

01. சிவனார் வேம்பு இலைகளை அரைத்து, பற்றுப் போட்டு வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து சீழ் வெளியேறி குணமாகும்.(997) (1663)

 

02. சிவனார் வேம்புச் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழைத்துத் தடவி வந்தால் மண்டைக் கரப்பான் குணமாகும்.(1030)

 

03. சிவனார் வேம்பு வேரினால் பல் துலக்கி வந்தால் பல் வலி குணமாகும் (1664)

 

04. சிவனார் வேம்பு இலைகளை அரைத்து எச்சில் தழும்புகள் மீது தடவி வந்தால், அவை குணமாகும்.(1676)

 

05. சிவனார் வேம்பு சமூலத்தை (வேருடன் கூடிய செடி)  எடுத்து சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி, இடித்து, பொடி செய்து கற்கண்டும் பாலும் சேர்த்து அருந்தி வந்தால் குட்ட நோய் குணமாகும்.(1722)

 

06. சிவனார் வேம்பு இலைகளை உலர்த்தி சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்துத் தடவி வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.(1723)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

 ===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )06]

{20-05-2021}

===================================================


சிவனார் வேம்பு


சிவனார் வேம்பு

சிவனார் வேம்பு

சிவனார் வேம்பு


சிவனார் வேம்பு